தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 'தென் இந்தியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியது. அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து முழுமையாக விலகும்' எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement