தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் நோட்டரி எண்ணிக்கை அதிகரிப்பு: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்கும் வகையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. ஆவணங்களில் மோசடி செய்வதை தடுக்கும் வகையில், சான்றாவணங்களில் கையொப்பமிட்டு அவற்றை அங்கீகரிக்க நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான 1956ம் ஆண்டு நோட்டரி சட்ட விதிகளில் ஒன்றிய சட்ட அமைச்சகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருத்தம் செய்துள்ளது.

Advertisement

இந்த திருத்தத்தின்படி, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், நாகலாந்து மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2,500 நோட்டரிகள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 3,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2,900ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்தானில் 2,000ல் இருந்து 3,000 ஆகவும், நாகலாந்தில் 200ல் இருந்து 400 ஆகவும் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்களின் எண்ணிக்கை, தாலுக்காக்கள் உள்ளிட்டவை கணக்கில் கொண்டு அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement