தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் இன்று காலை அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் திக்... திக்...

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். கொடைக்கானல் நகர் அருகே ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மலைச்சாலைகளில் காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டமாக உலா வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் பிரதான மலைச்சாலையில் இன்று காலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பள்ளத்து கால்வாய் பகுதியில் சென்றபோது ஒற்றை காட்டு யானை அரசு பஸ்சை திடீரென வழிமறித்தது.

Advertisement

இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து, டிரைவர் சுதாரித்து சிறிது தூரம் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சாலையில் வழிமறித்து நின்ற யானை அதே இடத்தில் இருந்தபடி சிறிது நேரம் போக்கு காட்டியது. பின்னர், வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்கினார். பிரதான மலைச்சாலைகளில் உலா வரும் காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News