சுகுணா புட்ஸ், கோழிப்பண்ணை அதிபர் வீடுகளில் ஐடி ரெய்டு

  கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் மிக பிரபலமானது. இந்த நிறுவனத்தை சுந்தராஜன் மற்றும் சௌந்திரராஜன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில்...

காசி விஸ்வநாதர் கோயிலில் முன்னாள் ஜனாதிபதி தரிசனம்

By Arun Kumar
4 hours ago

  தென்காசி: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்திற்கு வந்தார். அவர், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரி சோகோ மென்பொருள் நிறுவனர் இல்லத்தில் தங்கினார். நேற்று காலை ராம்நாத் கோவிந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம்...

தூத்துக்குடி எஸ்பி என்ஐஏவுக்கு மாற்றம்

By Arun Kumar
4 hours ago

  தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்பிஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தேசிய புலனாய்வு முகமையில் ஏற்பட்டுள்ள எஸ்பி காலியிடத்திற்கு தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட்ஜான், டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வசதியாக,...

ஒரு லட்சம் டன் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய நெல் கிடங்கு நாகையில் உள்ளது: விஜய்க்கு ஏஐடியூசி பதிலடி: சுமை தூக்கும் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தியதற்கு கண்டனம்

By Arun Kumar
4 hours ago

  தஞ்சாவூர்: ‘ஒரு லட்சம் டன் நெல் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய கிடங்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது’ என விஜய்க்கு, ஏஐடியுசி சங்கம் பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய், சுமை தூக்கும் தொழிலாளர்ளை கொச்சைப்படுத்தி பேசியது...

தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது; நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

By Arun Kumar
4 hours ago

  விருதுநகர்: தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது. நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற...

2வது ரயில் தயாரானதும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அக்டோபர் 15ல் அறிமுகம்? ஒன்றிய அமைச்சர் தகவல்

By Arun Kumar
4 hours ago

  புதுடெல்லி: ரயில்வே திட்டப்பணிகள் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்காக ஷகுர் பஸ்தி ரயில் பெட்டி தொழிற்சாலை கிடங்கில் ஏற்கனவே ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. தற்போது 2வது ரயில் தயாரிக்கப்பட்டு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. வரும்...

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு டிஎம்இ எச்சரிக்கை

By Karthik Yash
5 hours ago

சென்னை: கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கலந்தாய்வு மூலம் அரசு இடங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில்...

காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By Karthik Yash
5 hours ago

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடித்து வருவதை அடுத்து 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி...

அவசர அவசரமாக டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

By Karthik Yash
5 hours ago

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீர் அவசர பயணமாக, டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்று விட்டு மாலையே சென்னைக்கு திரும்பினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீர் பயணமாக, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். திடீர் பயணமாக நேற்று காலை 6 மணிக்கு,...

அஜித்குமார் வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்

By Karthik Yash
5 hours ago

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்...