தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் பல கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டு வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக 75 அறிவுத்திருவிழாவில் நேற்று நடந்த கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. நமது பாரம்பரிய எதிரிகளும், பரம்பரை எதிரிகளும், எல்லாருக்கும் எதிரியாக ஒரே கட்சி என்றால்,...
தமிழ்நாட்டில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டறிக்கை
சென்னை: தமிழகத்தில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென...
மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்(எஸ்ஐஆர்) பணிகள் குறித்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில்...
சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை போக்குவரத்து கழகத்திற்கு விருது
சென்னை: சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டன. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற 2025 ‘அர்பன் மொபிலிட்டி இந்தியா’ மாநாட்டில் சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் செயல்திறன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு...
முன்னணி நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி படத்தின் வியாபாரத்தில் பங்கு பெற்று நடிக்க வேண்டும்: வரம்புமீறி விமர்சித்தால் நடவடிக்கை வெப்தொடர்களில் நடிக்க தடை
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தமிழ் படங்களில் பணியாற்றும் நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர், தயாரிப்பாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு மாறாக, வெப்தொடர்களில் அதிகமாக நடிக்கிறார்கள். இதனால், பொதுமக்களிடம் படங்கள் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது....
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக...
ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின்படி நியாய விலை கடைகளுக்கு தொடர்ந்து கோதுமை வழங்கப்பட்டு வருகிறது: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி
சென்னை: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி பழனிசாமி 12573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை...
சென்னை மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை: 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஒரு வருட காலத்திற்கான காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாத காலியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த பாடப்பிரிவிகளில்...
எடப்பாடி பழனிசாமி, நடிகர் அருள்நிதி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் அருள்நிதி வீடுகளுக்கு இமெயிலில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து அபிராமபுரம் போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து இது வெறும் புரளி...