தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயிலட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மலைக்காய்கறிகளான முட்டைகோஸ், கேரட், புரூக்கோலி, மலைப்பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனி, நீர்ப்பனியின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாமல் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள் அனைத்திலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் கூக்கல்தொரை பகுதியில் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து குறைந்தது காணப்பட்ட நிலையில் விவசாயத்திற்கு போதிய நீர் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு ஏற்ற தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News