தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேலூர் சாரதி மாளிகை பின்புறத்தில் கட்டிய இலவச மாடி கழிவறையை திறக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் சாரதி மாளிகை பின்புறத்தில் கட்டிய இலவச கழிவறையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ேவலூர் சாரதி மாளிகை, நேதாஜி மார்க்கெட், மண்டி வீதி ஆகியவற்றிற்கு தினமும் ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக அப்பகுதிகளில் சில இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டது. சாரதி மாளிகை பின்புறத்தில் ஒவ்வொரு மாடியில் இருந்தபடியே கழிவறைக்கு செல்லும் வகையில், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக 3 மாடி கொண்ட இலவச கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இது கட்டப்பட்டது முதல் பூட்டியே கிடக்கிறது.

பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கழிவறை திறக்கப்படாததால் அப்பகுதியில் திறந்தவெளியை பலர் கழிவறையாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்நிலையில் இதன் அருகே மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கட்டண கழிவறை டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலவச மாடி கழிவறை கட்டிடத்தை உடனடியாக திறக்க மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News