தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது வீரலட்சுமி புகார்

Advertisement

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழர்களாகிய நாங்களும், தெலுங்கு மொழி பேசும் மக்களும் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரி ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியதை பல்வேறு வலைத்தளங்களில் பார்த்தேன். அதில் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவு செய்யும் வகையிலும், 300 ஆண்டுகளுக்கு முன்பு அரசர்களுக்கு அந்தபுரத்தில் பணிவிடை செய்யவந்தவர்கள்தான், தெலுங்கர்கள் என்று பேசியுள்ளார்.

இது தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவு செய்யும் செயலாகும். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களையும், தமிழர்களுக்கிடையே சண்டையை மூட்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். இதேபோன்று பல மாதங்களுக்கு முன்பாக தெலுங்கு மொழி பேசுகின்ற அருந்ததிய மக்களை இழிவு செய்து பேசியுள்ளார்கள். எனவே இதற்கு நிரந்தர முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நடிகை கஸ்தூரி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பொது அமைதியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக நாயுடு மகாஜன சங்கம், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் மற்றும் ராம மோகன் ராவ் பாசறை ஆகிய 3 சங்கம் சார்பில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதேபோல் தேனி அல்லிநகரில் ஏராளமான பெண்கள் நடிகை கஸ்தூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அல்லிநகரம் போலீசில் நடிகை கஸ்தூரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

Advertisement

Related News