தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாணியம்பாடியில் முகாம் செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம்

*கால்நடைத்துறை டாக்டர் விழிப்புணர்வு

Advertisement

வாணியம்பாடி : செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என வாணியம்பாடியில் நடந்த முகாமில் கால்நடைத்துறை டாக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலக வெறிநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நேற்று வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இலவச கால்நடை பராமரிப்பு மருந்தகத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் கால்நடை மருத்துவர் கோகிலாசன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்தினார்.

இதில் ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமில் செல்லபிராணி வளர்ப்பவர்களிடம் கால்நடை டாக்டர் பேசியதாவது:

வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறார்கள் தங்களது செல்லப்பிராணிகளான நாய், பூனைகளிடம் பாதுகாப்பற்ற முறையில் விளையாடுவதை அனுமதிக்க கூடாது. வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் குறிப்பிட்டகால இடைவெளியில் தங்களின் செல்லபிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். இது செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும். இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Advertisement