தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசு சார்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ரூ5 கோடி நிதியுதவி: அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்

Advertisement

சென்னை: வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ5 கோடி நிதியை அமைச்சர் எ.வ.வேலு, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவில் உயிரிழப்புகள், சொத்துகள் சேதமாகியுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ப்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். இந்த இயற்கை பேரிடரிலிருந்து மீட்பு மற்றம் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ5 கோடியை வழங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்கு துணையாக பணியாற்ற தமிழ்நாட்டில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினரை உடனடியாக அனுப்பி வைத்தார். இந்நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று சென்றார். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நிலவரங்களை கேட்றிந்தார். தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்த ரூ5 கோடிக்கான காசோலையை பினராயி விஜயனிடம் வழங்கினார்.

Advertisement

Related News