தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமூர்த்தி அணையில் தடையை மீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

*காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
Advertisement

உடுமலை : தடையை மீறி திருமூர்த்தி அணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில் திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

திருமூர்த்திமலை வரும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வதுடன், பொதுப்பணித்துறை விடுதி பகுதியில் சாலையோரம் நின்று திருமூர்த்தி அணையை ரசித்து செல்வது வழக்கம். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக அணை தண்ணீர் உள்ள பகுதியில் இறங்கி சென்று வந்தனர். அங்கு புதைகுழி இருப்பதால் கடந்த காலங்களில் பலர் புதைமணலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

எனவே, பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 750 மீட்டர் தூரத்துக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் அணையில் இறங்காமல் இருந்தனர். மேலும், ஆபத்தான பகுதி யாரும் செல்லக்கூடாது என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. போலீசாரும் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சமீப காலமாக கம்பி வேலி பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

இதன் வழியாக சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு செல்கின்றனர். அணை கரையில் அமர்ந்து செல்பி எடுக்கின்றனர். சிலர் ஆபத்தான பகுதியில் இறங்கி குளிக்கின்றனர். இதனால், அவர்கள் புதை குழியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கம்பி வேலியை சீரமைக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News