தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் அருகே 12ம் நூற்றாண்டு கல்வெட்டு, சிலைகள் கண்டெடுப்பு: புதைந்துபோன பெருமாள் கோயில் குறித்து தகவல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே, அம்பலத்தாடி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், பழமையான கோயில் அழிந்ததும், புதுப்பிக்கப்பட்டதும் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப்புல முதுகலை மாணவர் வினோத் ஆகியோர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அப்போது புதைந்துபோன கோயில் கல்வெட்டு, சிலைகளை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலத்தாடி கிராமத்தில் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த பாண்டியர் காலக் கல்வெட்டு, பெருமாள், தேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 10 வகையான சிலைகள், சிதைந்து உருக்குலைந்து போன நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

அம்பலத்தாடி கிராமம் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமணக் குடியிருப்பாக இருந்துவந்துள்ளது. இவர்கள் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலை வழிபட்டும் பராமரித்தும் வந்திருக்கின்றனர். அவர்கள் காலப்போக்கில் இடம்பெயர்ந்து சென்றதாலும் பிற காரணங்களாலும் இக்கோவில் வழிபாடின்றி சிதலமடைந்துவிட்டதை அறிய முடிகிறது. இக்கோயில் மூலவரான பெருமாள் சிலை, சிதைந்த நிலையில் 72 செ.மீ உயரம், 38 செ.மீ அகலத்துடன் காணப்படுகிறது. தலைப்பகுதிக்கு மேல் சேதமடைந்துள்ளது. இந்த சிலையில் பின்னிரு கைககளில் சங்கு, சக்கரம் உள்ளது. வலது முன்கை அபய முத்திரையுடனும், இடதுமுன்கை கட்டிய வலம்பித முத்திரையுடனும் காணப்படுகிறது. தேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் சிதைந்துள்ளன. கழுத்தணிகள், கையணிகள், தோளணிகளுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

தலையில் கிரீடத்துடன் கூடிய கருடாழ்வார் சிலை, தொடைக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. கோயிலின் சிதைந்த பாகங்கள் ஊரில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கி.பி.12ம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் கூடிய 2 வரி துண்டு கல்வெட்டு, உடைந்து உருக்குழைந்து போய் காணப்படுகிறது. ‘ஒன்று’ என்ற சொல்லைத் தவிர வேறு எதையும் படிக்க இயலவில்லை. இங்கு மேற்கொண்ட ஆய்வில் இரண்டு பெருமாள் சிலைகள், இரண்டிரண்டு தேவி, பூதேவி சிலைகள் கிடைப்பதாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருப்பதாலும், முன்பு இங்கிருந்த பெருமாள் கோயில் அழிவுற்றதால் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அக்கோயில் மீண்டும் அழிவுற்றது என்பதை அறிய முடிகிறது’ என்றனர். மேலும், கோயில் சிதைவு பற்றிய ஆய்வு தொடர்வதாக தெரிவித்தனர்.

Advertisement