தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் முறிந்து விழுந்தது

Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ஜூனன் தபசு, கிருஷ்ணா மண்டபம் அமைந்துள்ளது. எப்போதுமே, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், மேற்கு ராஜ வீதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் ஒன்று நேற்று மதியம் திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

அப்போது, சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமால் சாலையில் விழுந்து கிடந்த காட்டுவான் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டு, துண்டுகளாக அறுத்து அப்புறபடுத்தினர்.

Advertisement