தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதா: அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிமுகம் செய்தார். மசோதாவில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.சிறுபான்மையினரல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் தனியார் பல்கலைக்கழகம் என்றால் 50 சதவீத இடங்களையும், மருத்துவம், பல்மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணைப் பாடப்பிரிவுகள் மற்றும் இந்திய மருத்துவப் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றபடி அரசுக்கு ஒதுக்க வேண்டும்.

Advertisement

இளநிலை மருத்துவம், அறுவை சிகிச்சை, இளநிலை பல்மருத்துவம் போன்றவை அதில் உள்ளடங்கும். இவை மட்டுமல்லாமல், அரசு அறிவிக்கும் இளநிலை, முதுநிலையிலான வேறு பாடப்பிரிவுகளும் அதில் உள்ளடங்கும். ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகத்திலும் ஒதுக்கப்பட்ட அரசு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும். கல்லூரி நிலையில் இருந்து பல்கலைக்கழகமாக மாறும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் உள்ளவர்களுக்கான பணி நிபந்தனைகளை குறைக்கக் கூடாது. பல்கலைக்கழகமாக மாற்றப்படும் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அதிமுக கட்சி சார்பில் ஆரம்ப நிலையில் எதிர்ப்பதாக அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Advertisement

Related News