தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சோதனை: சந்தன ஆயில் நிறுவன அதிபர் நாசருக்கு வனத்துறை சம்மன்

Advertisement

சேலம்: சேலத்தில் 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியதில் 7 டன் சந்தன மரக்கட்டைகளை சிறிய சிறிய கட்டைகளாக பாக்கெட் செய்து மூட்டையில் பதுக்கி வைத்தது அம்பலமமாகியுள்ளது. வில்லியனூர் அருகே புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமாரின், மகள் பிரேமாவின் இடத்தில் சந்தன ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிலத்தை கேரளாவைச் சேர்ந்த நாசர் என்பவர் குத்தகைக்கு வாங்கி, இந்தோ அப்ரோ எசன்ஷியல் ஆயில் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து சந்தன கட்டைகள் இறக்குமதி செய்து எண்ணெய் எடுத்து மீண்டும் வெளிநாடுகளுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியில் சந்தன கட்டைகள் ஏற்றி சென்ற வாகனத்தை வனத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். கேரளாவில் இருந்து புதுச்சேரி உளவாய்க்கால் பகுதியில் உள்ள கம்பெனியில் இருந்து ஏற்றி செல்வதாக தெரிவித்துள்ளனர். சந்தன கட்டைகள் பறிமுதல் தொடர்பாக சந்தன ஆயில் நிறுவனம் நடத்திவரும் நாசர் என்பவருக்கு தமிழ்நாடு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வனத்துறை சம்மனை தொடர்ந்து சந்தன ஆயில் நிறுவனம் நடத்தி வரும் நாசர், சேலம் வனத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

Advertisement

Related News