தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்

Advertisement

சூலூர்: கோவை பேரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (56). இவர், கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டாக சூலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெற்றிச்செல்வனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் வெற்றிச்செல்வனை சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஒரு மாதமாக வெற்றிச்செல்வன் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன் நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது மகளுக்கு சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சூலூரில் உள்ள வீட்டில் வெற்றிசெல்வன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், நேற்று மாலை 4 மணியளவில் சூலூரில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Related News