தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Advertisement

சென்னை: ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடியில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன எரிகள் புனரமைப்பு பணிகள் நடைபெறும். தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி, மதகு போன்ற கட்டமைப்புகள் புனரமைக்கப்படும். பயன்பாட்டாளர்கள் குழு இல்லாத இடத்தில் புதியதாக அழைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News