தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்பே ராஜினாமா செய்திருக்கலாம் மனோஜ் பாண்டியன் பரிதாபத்துக்குரியவராகி விட்டார் செங்கோட்டையன்: மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

சென்னை: இப்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் மனோஜ் பாண்டியன் 2, 3 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்கலாம். செங்கோட்டையன் பரிதாபத்திற்குரியவர் ஆகி விட்டார் என்று முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வம் கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

Advertisement

இதில், அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், கட்சி உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவின் உண்மையான இயக்கம் அவருடைய தலைமையிலேயே நடைபெறுகிறது. மனோஜ் பாண்டியன் குடும்பத்தினர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர்கள்.

அரசியல் வாய்ப்புகளை அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே வழங்கியது. இவ்வளவு நன்மை செய்த இயக்கத்திற்கு எதிராக மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பது நன்றிக்கேடாகும். இப்போது‌, தனது பதவியை ராஜினாமா செய்யும் மனோஜ் பாண்டியன், கடந்த 3, 4 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்கலாமே. அதிமுக உறுதியுடன் முன்னேறும். மேலும், பரிதாபத்துக்குரியவர் ஆகிவிட்டார் செங்கோட்டையன்.

Advertisement