தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து காரை கூட்ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம், சிப்காட், பெல், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, திருவலம், பொன்னை போன்ற ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கிறது. மேலும் சித்தூர் செல்வதற்கும் இவ்வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் காரை கூட்ரோடு பேருந்து நிறுத்தம் உள்ளது. பல்வேறு ஊர்களுக்கு செல்ல இங்கு பயணிகள், பொதுமக்கள் பேருந்து வரும் வரை காத்திருந்து பேருந்து வந்தவுடன் செல்வார்கள்.

காரை கூட்டோட்டில் மேம்பாலம் பணிகள் நடப்பதால் தற்காலிக நிழற்குடை ஓலை கொட்டகையில் அமைத்து இருந்தனர். தற்போது அந்த ஓலை கொட்டகை சரிந்துள்ளது. இதனால் பேருந்து வரும் வரை முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள், பயணிகள் என பலர் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே காரை கூட்ரோட்டில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement