தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் பள்ளத்தாக்கில் சீராக உள்ள செவ்வாழை விலை

Advertisement

*விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூர் : செவ்வாழை விலை கடந்த சில மாதங்களாக சீராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தோட்ட விவசாயத்தில் வாழை பயிரிடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் வாழைக்கு உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உள்ளது. தற்போது கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் செவ்வாழை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழைக்கன்று நடப்பட்டு 12 மாதங்கள் ஆன நிலையில் செவ்வாழைத்தார் ஒன்று 10 முதல் 15 கிலோ வரை எடை கிடைக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக ரூ.65 முதல் ரூ.80 வரை சென்ற செவ்வாழை விலை, தோட்ட விலைக்கு தற்போது ரூ.65க்கு வெட்டப்படுகிறது. இதர வாழை ரகங்களை காட்டிலும் செவ்வாழைக்கு கடந்த மூன்று மாதங்களாக சீரான விலை கிடைப்பதால் செவ்வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கே விளையும் செவ்வாழை அண்டை மாநிலமான கேரளா, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை சென்னை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஐம்பது ரூபாய்க்கு மேல் விற்றால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது ரூ.65க்கு மேல் விலை கிடைத்து வருவதால் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement

Related News