தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளப்பட்டி-சிலுக்குவார்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

Advertisement

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி-சிலுக்குவார்பட்டி இடையே உள்ள நெடுஞ்சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை அருகே மதுரையில் இருந்து பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக பெரியகுளம், தேனி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையான எப்போதும் பரபரப்பான சாலையாக உள்ளது. பள்ளப்பட்டி பிரிவு முதல் சிலுக்குவார்பட்டி வரை உள்ள குறுகலான இச்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் செய்யபடவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பல இடங்களில் பெயர்ந்து பெரிய பெரிய பள்ளங்களாகவும், சாலையின் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழையினால் சாலையிலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News