தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல், பருத்தி, வாழைக்கு பின் வெண்டைக்காய் சாகுபடி

*தினமும் வருமானம் விவசாயிகள் மும்முரம்

Advertisement

செம்பனார்கோயில் : நெல், பருத்தி, வாழைக்கு பின் ஒரு சில இடங்களில் வெண்டைக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தினமும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பிரதான தொழிலாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நெல், பருத்தி, வாழை, வெண்டைக்காய், கீரை வகைகள் போன்ற விளை பொருட்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்பனார்கோயில் அருகே கீழையூர், கருவிழந்தநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து வெண்டைக்காய் சாகுபடி விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் பெரும்பாலும் நெல், பருத்தி, வாழை உள்ளிட்டவைகள் தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது வெண்டைக்காய், சோளம் மற்றும் கீரை வகைகளையும் சாகுபடி செய்வோம். அந்த வகையில் கடந்த மாத தொடக்கத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்தேன்.

வெண்டைக்காய் மக்கள் விரும்பி சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் அறிவு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மையில்தான் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

மேலும் தினமும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனை எல்லா மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்ணில் மிகவும் நன்றாக வளரும். சாகுபடியின்போது மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும்.

அப்போது தான் விரைந்து விளைச்சலாகும். வெண்டை சாகுபடிக்கு கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா போன்ற ரகங்கள் உகந்ததாக இருக்கும். வெண்டைக்காயை சாகுபடி செய்வதற்கான செலவு குறைவாகும். காய்கள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்து விடவேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்.

Advertisement

Related News