தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வது சீசன் தொடங்கிய நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டியில் மலர் செடிகள் பராமரிப்பு

ஊட்டி: இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில், தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2வது சீசன் அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசன் போன்று மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்றாலும், பூங்கா முழுவதும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 15 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப்படுவதால் இம்மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் பெரும்பாலான செடிகளில் மலர்களை காண முடியும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement