தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை டவுனில் இன்று அதிகாலை நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான நெல்ைல டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த 4ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவை தொடர்ந்து அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும், பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்மன் ரதவீதி உலாவும் நடந்தது. இதைத்தொடர்ந்து 11ம் நாளான நேற்று காலை அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் தபசு கோலத்தில் தங்க சப்பரத்தில் அதிகாலை ஒரு மணிக்கு எழுந்தருளினார். மேலும் தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்துக்கு அதிகாலையில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து நேற்று (14ம் தேதி) நண்பகல் 12 மணி அளவில் டவுன் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும், பின்னர் சுவாமி, அம்பாள் ரதவீதி வலமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 12ம் நாளான இன்று (15ம் தேதி) அதிகாலை அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் வீதியுலா நடந்தது. இதையடுத்து மூன்று நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேசம் வீதி உலாவுடன் ஐப்பசி திருக்கல்யாண விழா நிறைவடைகிறது.

Advertisement

Related News