தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தொடரும் பருவமழையால் பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து

பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் தென்மேற்கு பருவமழையால், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், சர்க்கார்பதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணை மற்றும் ஆழியார் அணைக்கு செல்கிறது.

ஆனால்கடந்த ஜனவரி முதல் மே மாதம் 2வது வாரம் வரை மழை குறைவால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. மேலும், சில நாட்கள் கோடை மழை இருந்தும், அந்நேரத்தில் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை.

இதன் காரணமாக மொத்தம் 72 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் வாரத்திற்கு முன்பு வரை 25 அடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கன மழையின்போது பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பரம்பிக்குளம் பகுதியில் மழை சற்று குறைவாக இருந்தாலும் நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Related News