தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே அகழியில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறையினர் விசாரணை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அகழியில் இறந்து கிடந்த ஆண் யானை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டி உள்ள திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தை ஒட்டியுள்ள அகழியில் இன்று காலை காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று விசாரித்தனர்.

Advertisement

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வன கால்நடை மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து யானைக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘அகழியில் இறந்த நிலையில் காணப்பட்டது சுமார் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஆகும். அகழியை தாண்ட முற்பட்டபோது நிலை தடுமாறி மார்பு பகுதி அகழி மீது மோதியதில் யானை இறந்திருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பிறகே யானை இறப்பிற்கான முழு விவரம் தெரியவரும்’’ என்றனர்.

Advertisement

Related News