தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவ கல்லூரி வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

*கொலையா? போலீசார் விசாரணை

Advertisement

சிதம்பரம் : மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கொரோனா வார்டு பின்புறம் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் அடைப்பு இருந்ததால், அந்த அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, கழிவுநீரில் இறந்து கிடந்தவர் யார், எப்படி இறந்தார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்துவிட்டு கழிவுநீரில் போட்டுவிட்டு சென்றனரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News