தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

*உறவினர்கள் திடீர் சாலை மறியல்
Advertisement

சோளிங்கர் : சோளிங்கரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா(26). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(24). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்கு 5 வயதில் ஆண், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஜீவா தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜீவா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தமிழ்ச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை ஆர்டிஓ ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, தற்கொலைக்கு காரணமான ஜீவாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால், சோளிங்கர்- திருத்தணி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News