தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு; மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் ஆய்வு

Advertisement

அரக்கோணம்: அரக்கோணம் அருகே வனப்பகுதியொட்டி உள்ள கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அப்பகுதியில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையிலும், அரக்கோணம்- திருத்தணி ரயில் மார்க்கத்திலும் வனப்பகுதி உள்ளது. இங்கு புள்ளி மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட சில வன விலஙகுகள் உள்ளன. இரைத்தேடி மான்கள் வனப் பகுதியில் இருந்து வெளியே வரும்போது ரயில் மற்றும் வாகனங்களில் சிக்கி பலியாகி வருகின்றன. வனப்பகுதியொட்டி உள்ள கைனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதோடு, சிறுத்தையின் கால் தடங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால், அங்கிருந்தது சிறுத்தையின் கால்தடம் அல்ல, காட்டு பன்றியின் கால்தடம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு சின்ன கைனூர் பகுதியில் உள்ள புதரில் சிறுத்தை பதுங்கியிருந்ததை சிலர் பார்த்ததாக தகவல் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டிக் கொண்டு அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். மேலும், பலர் பீதியில் தங்களது வீடுகளிலேயே விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர். இதுதொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை, வருவாய் துறை மற்றும் டவுன் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ராணிப்பேட்டை மாவட்ட வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் வனவர் துரைமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் முரளிதரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சின்ன கைனூர் சம்பவ பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிகிறது. மேலும், இந்த வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் எதுவும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement