தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் 2வது நாளாக போராட்டம்

*கிராமப்புற பணிகள் முடக்கம்
Advertisement

நாகர்கோவில் : ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று முன் தினம் (22ம்தேதி) தொடங்கியது. நேற்று 2 வது நாளாக போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்திலும் 2 வது நாள் போராட்டம் காரணமாக, குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குமரி மாவட்ட வளர்ச்சி பிரிவு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், 9 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் வளர்ச்சி பிரிவு ஊழியர்கள் பணிக்கு வர வில்லை.

இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகின்ற நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக அதன் நிர்வாகிகள் கூறி உள்ளனர். இதில் கலெக்டர் அலுவலகத்தில் மட்டுமே ஊரக வளர்ச்சி துறை சார்பில் 220 பேர் வரை பணிக்கு வர வில்லை என்றும், இந்த போராட்டம் காரணமாக ஊரக பகுதிகளில் அரசின் திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாட்களாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் முடங்கியதாக சங்க பொறுப்பாளர்கள் கூறினர்.

Advertisement

Related News