தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலாப்பட்டு அருகே ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த உ.பி. மாணவி மாயம்

*மீனவர்கள் உதவியுடன் தேடும் போலீசார்
Advertisement

காலாப்பட்டு : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த உ.பி. மாணவி, காலாப்பட்டு அருகே ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி மாயமானார். அவரை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சவுமியா (24), கல்லூரி மாணவி. இவர் தனது ஆண் நண்பரான சித்தார்த்தின் தாய் ஜெயந்தி (45) என்பவருடன் கடந்த 22ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.

புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள், ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கினர். இருவரும் நேற்று முன்தினம் ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நண்பரின் தாய் ஜெயந்திக்கு மட்டும் டிக்கெட் கிடைத்தது. ஆகையால் அதன்பிறகு சவுமியா, ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். அதனால் அவர், ஏற்கனவே தங்கியிருந்த விடுதிக்கு அவர் திரும்பினார்.

இதற்கிடையே நேரத்தை கழிக்க அவர், பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு, தனது அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த திண்டுக்கல் உத்தம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (27), விடுதி ஊழியர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மணீஷ் (32) ஆகியோருடன் பொம்மையார்பாளையம் கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் மாணவி சவுமியா இழுத்து செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், மணீஷ் ஆகிய இருவரும் அருகிலிருந்த மீனவர்களிடம் நடந்ததை கூறினர்.

தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவி சவுமியா என்ன ஆனார்? என தெரியவில்லை. கடலில் இழுத்து செல்லப்பட்ட மாணவி சவுமியாவை மீனவர்கள் உதவியுடன் கோட்டக்குப்பம் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் உள்ள மாணவியின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். சுரேஷ்குமார், மணீஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News