தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பண்ருட்டி அருகே முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு

பண்ருட்டி : பண்ருட்டி வட்டம் அவியனூரில் உள்ள அர்த்த மூர்த்திஸ்வரசுவாமி கோயிலில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக கோயில் வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்தபோது சுமார் மூன்றரை அடி ஆழத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அவியனூரில் கண்டெடுத்த பலகை கல் 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இப்பலகை கல்லில் மொத்தம் 8 வரிகள் கல்வெட்டு காணப்படுகிறது. ராசேந்திரசோழன் என்ற இயற்பெயர் உடைய முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது.

இவ்வூரை சேர்ந்த பிராமணனின் மனைவி, பிராமணி பொன்னங்கைச்சானி என்பவர் இக்கோயிலில் விளக்கு எரிக்க ஒன்பது காசுகள் கொடுத்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. முதலாம் குலோத்துங்கன் 1070 முதல் 1120 வரை ஆட்சி புரிந்தார். அவியனூரில் கண்டெடுத்த முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீர்த்தி, சாமி பெயர் மற்றும் தானம் குறித்த செய்திகள் காணப்படுகிறது. இதன் மூலம் சோழர் காலத்தில் இருந்தே அவியனூர் பழமையான வரலாற்றை கொண்டது என தெரிய வருகிறது, என்றனர்.