தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு பொள்ளாச்சி சுற்று வட்டார களன்களில் கொப்பரை உலரவைக்கும் பணி தீவிரம்

*ஏற்றுமதியும் அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகமாக உள்ளதால் களன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால், வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகமாக உள்ளது. இதனால், இப்பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களன்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது உலர் களன்களில் தொடர்ந்து கொப்பரை உலரவைக்கும் பணி நடக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் கொப்பரைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோது, கொப்பரை உற்பத்தி அதிகமாக காணப்பட்டது.

அதன்பின், கடந்த மே 3வது வாரத்திலிருந்து சுமார் 10 நாட்களுக்கு மேலாக இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மழை பெய்தது. மழை அவ்வப்போது இருந்ததால், சுற்று வட்டார பகுதிகளில் களன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தடைப்பட்டு கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

வழக்கமாக தினமும் 500 டன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகும். ஆனால் மழைகாலத்தில் 200 டன்னாக குறைவானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதைத்தொடர்ந்து, களன்களில் மீண்டும் கொப்பரை உலரவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், தேங்காய் உற்பத்தி குறைவாக இருந்தாலும், கொப்பரை தேங்காய்க்கு அதிக கிராக்கியால், தேங்காயை உடைத்து காய வைத்து கொப்பரையாக மாற்றி, கொப்பரை உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க செய்து வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவு 300 டன்னாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுக்கும் வரை கொப்பரை உலர வைக்கும் பணி தொடர்ந்திருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.