தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் மனைவி தூக்கிட்டு சாவு; குளுக்கோசில் விஷ ஊசி செலுத்தி அரசு டாக்டர் தற்கொலை: 3வது முயற்சியில் விபரீதம்

Advertisement

சேலம்: காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில், சேலம் அரசு மருத்துவர் குளுக்கோசில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் இனியன் (32). இவர் தென்காசி மாவட்டம் கலிங்கப் பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தம்பதி இருவரும் தென்காசியில் வசித்து வந்தனர். ஒன்றரை மாத கர்ப்பிணியான சவுமியா சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் தெரிவித்தார். அப்போது, இனியன் எனது தாயும் சேலத்தில் தனியாக இருப்பதாகவும் இதனால் எனது தாய் வீட்டுக்கு செல்லும்படி அவர் சவுமியாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த சவுமியா கடந்த 6ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இனியனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினர். பின்னர் சேலம் வந்த, இனியன் வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு காப்பாற்றினர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இனியன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று அவர் மீண்டும் வீடு திரும்பினார். நேற்றிரவு தனது அறைக்கு வழக்கம் போல் படுக்க சென்றார். இன்று காலை அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், அவரது அறைக்கு சென்று குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது, அவரது உடலில் குளுக்கோஸ் செலுத்தப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், குளுக்கோசில் விஷ ஊசியை செலுத்திய இனியன், அந்த குளுக்கோசை தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது. காதல் மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News