தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைகாய்கறி தோட்டத்திற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது: கேரட், பூண்டு பயிர்கள் சேதம்

Advertisement

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள மசகல் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறு தூர்வாரப்படாததால் தற்போது மசகல் பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் மலைப்பூண்டு,முட்டைகோஸ்,கேரட்,புரூக்கோளி போன்ற மலைக்காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மசகல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் இப்பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் மலைக் காய்கறிகளான முட்டைகோஸ்,கேரட், புரூக்கோளி,மலைப்பூண்டு,பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேற்கண்ட விவசாய நிலங்களுக்கு தீனட்டி மலைப்பகுதியில் இருந்து மசகல் பகுதி நோக்கி செல்லும் ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது.

அவ்வாறு வரக்கூடிய ஆற்று நீரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட ஆறினை சுமார் எட்டு ஆண்டுக்கு மேலாக தூர் வாரப்படவில்லை.ஆறு தூர்வாரப் படாததால் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்தன. இதில் சுமார் 20 இலட்சம் மதிப்பிலான மலைப்பூண்டு,முட்டைகோஸ்,புருக்கோளி,கேரட் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே விவசாயிகளின் நலன் கருதி போர்கால அடிப்படையில் மசகல் ஆற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News