தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்மேற்கு பருவமழையால் நிரம்பும்நிலையில் ராமநதி அணை: கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Advertisement

கடையம்: தென் மேற்கு பருவமழையால் ராமநதி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளதால் கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையானது நிரம்பி வரும் நிலையில் உள்ளது. அணைக்கு 300 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. இதனிடையே நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளதால் கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை

விடப்பட்டுள்ளது.

Advertisement

Related News