தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரத்தில் வரத்து குறைவால் கிடுகிடு; மும்முடங்கு விலை உயர்ந்த வாழை இலை: 200 எண்ணிக்கை கொண்ட கட்டு ரூ.2,500

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வரத்து குறைவால் வாழை இலை விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.700க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.2500க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 20க்கும் மேற்பட்ட வாழை இலை மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழை இலைகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அவைகளை 200 இலைகள் கொண்ட கட்டாக கட்டி விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700க்கு விற்பனையானது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவால், ஒட்டன்சத்திரம் கடைகளுக்கு வாழை இலை வரத்து குறைந்துள்ளது.

Advertisement

இதனால், தற்போது 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வாழை இலை வியாபாரிகள் கூறுகையில், ‘‘தொடர் முகூர்த்த தினங்கள், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் வாழை இலை தேவை அதிகமாக உள்ளது. சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மரத்திலேயே வாழை இலைகள் கருகி விடுகின்றன. இதனால் வாழை இலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில மாதங்களுக்கு தொடரும்’ என்றனர்.

Advertisement

Related News