தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு மக்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேச்சால் சிரிப்பலை

Advertisement

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையமும், திருச்சியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமும் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விகேஎஸ்.இளங்கோவன் நன்றி தெரிவித்து பேசுகையில், இந்திரா காந்தி சிலையை சென்னையில் அமைக்க போகிறோம் என அறிவித்த முதல்வருக்கு நன்றி. இந்த அறிவிப்பு மூலம் தனது உள்ளம் பெரியது. யாருக்கும் தான் பகைவன் அல்ல. எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என்பதை முதல்வர் சொல்லாமல் சொல்லியுள்ளார். ஓசூர் விமான நிலையத்தை பற்றி பேசிய போது பாமக எம்எல்ஏ அருள், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரினார். அது ஏற்றுக் கொள்ள கூடியது தான்.

ஆனால் சேலம் விமான நிலையம் 6 மாதம் இயங்கும், மீண்டும் மூடிவிடுவார்கள். காரணம் அங்கு நிறைய பயணிகளே வருவதில்லை. என்னை பொறுத்தவரை பயனுள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்றால் அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் நடுவில் வைக்க வேண்டும். இப்போது உள்ள விமான நிலையம் ஓமலூரில் தான் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும். இதனால் விமான நிலையத்தை நகர்த்தி சங்ககிரியில் வைத்தால், கொங்கு மண்டலத்தில் உள்ள பாதி பகுதி பயன் அடையும். ஈரோடு மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். இதை பாமக உறுப்பினர் அருளும் ஒரு பரந்த எண்ணத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார். இளங்கோவனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கேட்டதும் கொடுக்கிற ஆட்சிதான் திமுக ஆட்சி: பாமக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் நன்றாகப் பேசக்கூடியவர் தான். அவர் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் என்று மூன்று, நான்கு முறை மன்றாடிக் கொண்டே இருக்கிறார். இந்த ஆட்சி அந்த மாதிரி ஆட்சி அல்ல. இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், முதல்வரை பொறுத்தவரைக்கும் எல்லோரையும் சமமாக கருதிதான், எல்லா சட்டமன்ற தொகுதிக்கும், சட்டமன்ற உறுப்பனிர்களிடமிருந்து மனுக்களை பெற்று அதற்கு வேண்டிய பணிகளை எல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் சொன்னாலே போதும். அதை குறித்து வைத்துக்கொண்டு, அதைச் செய்வதற்கு அமைச்சர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் மன்றாட வேண்டாம். மன்றாடி, மன்றாடி என்ற வார்த்தை தேவையில்லை. நீங்கள் மன்றாட வேண்டிய அவசியமே இல்லை. கேட்டதும் கொடுக்கிற ஆட்சிதான் இந்த ஆட்சி என்றார்.

Advertisement