தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகிரி அருகே உடல்நல குறைவால் எழமுடியாமல் தவித்த யானை குணமாகி காட்டுக்குள் சென்றது

சிவகிரி: சிவகிரி அருகே உடல்நல குறைவால் எழ முடியாமல் இருந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் யானை குணமாகி வனப்பகுதிக்குள் சென்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சின்ன ஆவுடைபேரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் யானை ஒன்று பெரிய பனை மரத்தை வேரோடு சாய்த்தது, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு பெரிய ஆவுடையபேரி பகுதியை ஒட்டி உள்ள குசவல்காடு பகுதியில் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தது.

Advertisement

இதுபற்றி பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், ரேஞ்சர் கதிரவன், வனவர் பிரகாஷ், கால்நடை மருத்துவ நிபுணர் சாந்தகுமார், வன காவலர்கள் மாரியப்பன், ஆனந்த் உள்ளிட்டோர் அங்கு சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை தொடங்கினர். இருப்பினும் யானையால் எழுந்து நிற்க முடியாததால் பெரிய கிரேன் மூலம் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின், 3வது நாளான இன்று யானை குணமாகி எழுந்து நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

Advertisement

Related News