தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை

Advertisement

பூந்தமல்லி: வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியுடன் அடிக்கடி போனில் தகராறு ஏற்பட்டு வந்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த அண்ணனூர் ஜோதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு யோவான் (40) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி நித்யா (38) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், மனைவி வெளிநாட்டில் இருப்பதால், கணவன் மனைவிக்குள் மொபைல் போனில் அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. இதில், வழக்கம் போல், இரு தினங்களுக்கு முன், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை, மன உளைச்சலில் இருந்த யோவான், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவதன்று, உறவினர் ஒருவர் யோவானுக்கு போன் செய்தபோது எடுக்கவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. எனவே, ஜன்னலை உடைத்து பார்த்தபோது, யோவான் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து, யோவான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News