தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேரம்பாடியில் யானை உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானை மற்றும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வன விலங்குகள் மனித மோதல்கள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
Advertisement

இந்நிலையில் பந்தலூர் அருகே சேரம்பாடி பஜாரில் நேற்று மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தலைவர் ஷிபி தலைமை வகித்தார். செயலாளர் பழனி வரவேற்று பேசினார். பொருளாளர் ஆசிம், ஒருங்கிணைப்பாளர்கள் ரவி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதியில் இதுவரை காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினை அரசு கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்.

மக்கள் வசிப்பிடங்களுக்கு இடையே உள்ள காடுகளை அகற்றி மக்கள் வசிக்கும் இடம் மற்றும் விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். தேவையான இடங்களில் அகழி மற்றும் மின்வேலிகள் அமைக்க வேண்டும். யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான உணவு தீவனங்களை வனத்தில் வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்கு மனித மோதல்களை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வனம் மற்றும் மக்கள் வசிப்பிடத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.தொடர்ந்து பொதுமக்களின் போராட்டங்கள் பல்வேறு விதங்களில் தொடரும் என மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News