தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமனார் வீட்டில் அளித்த விருந்தில் இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை சாவு: திருமணமான 17 நாளில் சோகம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இறால் பிரை சாப்பிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திருமணமான 17 நாளில் நடந்த சோக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சீனிவாசன் நகர் கனரா வங்கி காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சீவ்ராஜ்(28). திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த விஜயமூர்த்தி என்பவரின் மகளுக்கும் கடந்த 11ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

Advertisement

திருமணத்துக்கு பின்பு திருச்சியில் வசித்து வந்த சஞ்சீவ்ராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமனார் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டில் ஏற்பாடு செய்த விருந்தை சாப்பிட்டுள்ளார். அப்போது இறால் சாப்பிட்ட சஞ்சீவ்ராஜூக்கு சிறிது நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சஞ்சீவ்ராஜின் தாய் கல்யாணி, வளவனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News