தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 15க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை குன்னூர் நகராட்சியினர் அகற்றினர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வரும் சம்பவத்தால் பாதசாரிகள் குறுகலான பாதையில் நடக்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருவதாக குன்னூர் நகராட்சியினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

Advertisement

அதன் அடிப்படையில் கடந்த மூன்று மாத காலமாக நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சியினர் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வந்தனர்.

மேலும் வியாபாரிகளுக்கு அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நகராட்சியினர் முதற்கட்டமாக நேற்று சிம்ஸ் பூங்கா நுழைவாயில் பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தள்ளுவண்டி மூலம் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் முறையாக நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் ஓரிரு நாட்களில் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள மற்ற ஆக்கிரப்பு கடைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News