தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நள்ளிரவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் ; பலியானோர் உடலுக்கு அஞ்சலி கொடூரத்தை விவரிக்க முடியாத அளவுக்கு சோகம் சூழ்ந்திருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேட்டி

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு நள்ளிரவிலேயே வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடந்த கொடூரத்தை விவரிக்க முடியாத அளவுக்கு சோகம் சூழ்ந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார். கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Advertisement

இந்த செய்தி அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் அதிகாலை 3 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதலில் பிணவறைக்கு சென்ற முதல்வர், அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் வார்டு மற்றும் ஐசியூவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து மருத்துவமனை கூட்ட அரங்கில் அமைச்சர்கள் ேக.என்,நேரு, அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, பெரியகருப்பன், ரகுபதி, சிவசங்கர், மெய்யநாதன், திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, எம்பி ஜோதிமணி, கலெக்டர் தங்கவேல், மருத்துவமனை டீன் லோகநாயகி மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சிகிச்சை பெற்று வருவோர் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு உங்கள் முன்னால் நான் நின்றுக் கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி விவரிக்க கூட எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நான் வேதனையில் இருக்கிறேன்.

நேற்று இரவு, சென்னையில் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. உடனே, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நான் தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று கூறினேன்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சி தலைவர்களை தொடர்புகொண்டு நான் கேட்டபோது அவரும் சில தகவல்களை கூறினார். அடுத்த 5 நிமிடங்களில் மருத்துவமனைக்கு முதலில் 4, 5 பேர் கொண்டு வரப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. பிறகு போகப்போக அதிகமான நபர்களை கொண்டு செல்கிறார்கள் என்று சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து, மரண செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

உடனடியாக நான் இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அமைச்சர்களை தொடர்பு கொண்டேன். அதன் அடிப்படையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை உடனடியாக கரூர் செல்லும்படி உத்தரவிட்டேன். பிறகு நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை அழைத்து உடனடியாக அங்கு சென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன்.

பிறகு டிஜிபி, சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையெல்லாம் தொடர்புகொண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன். அந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. அதற்கு பிறகு உடனடியாக நம்முடைய மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு ஆகிய அனைவரையும் அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு சென்றேன்.

டிஜிபி மற்றும் உயர் அலுவலர்களையும் கலந்தாலோசித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எப்படி மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரங்களை எல்லாம் கேட்டேன். பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள், கரூர் அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உடனடியாக கரூருக்கு செல்லும்படி உத்தரவிட்டதன் அடிப்படையில், கரூருக்கு வந்தனர்.

இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பெருந்துயரமான இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்கள் இதுவரை நாம் இழந்திருக்கிறோம். இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 17 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் என்பது இதுவரை நடக்காதது - இனிமேலும் நடக்கக்கூடாது.

மேலும், 51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று கொண்டிருக்கிறார்கள். அதில் 26 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். இவர்கள் எல்லோரும் நலமடைந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இறந்த உயிர்களுக்கெல்லாம் கனத்த இதயத்தோடு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை.

இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதுமட்டுமல்ல, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைப்பதற்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று காலை கரூர் வரலாம் என்றிருந்தேன்.

இந்த கொடூரமான காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை. வீட்டில் இருக்கவே என்னால் முடியவில்லை. அதனால்தான் முன்கூட்டியே வரவேண்டும் என்று இன்று அதிகாலை, ஒரு மணியளவில் இங்கு வந்திருக்கிறேன். மரணமடைந்திருக்கக்கூடிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விழைகிறேன்.

ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணையம் அறிக்கை அளித்த பிறகு முழுமையாக சொல்கிறோம். இதற்கிடையில், அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஆணையம் அதற்காகதான் அமைத்திருக்கிறோம். அந்த ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும். அந்த உண்மை வெளிவரும்போது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் என்பது இதுவரை நடக்காதது - இனிமேலும் நடக்கக்கூடாது.

* இறந்த உயிர்களுக்கெல்லாம் கனத்த இதயத்தோடு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை.

Advertisement

Related News