தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

Advertisement

பாலக்காடு: பாலக்காடு அருகே முகாமிட்டுள்ள சில்லிக் கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதியில் சில்லிக்கொம்பன் யானை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் அங்குள்ள கூனம்பாலம் பகுதியில் மாமரத்தில் உள்ள மாம்பழங்களை பறித்து சாப்பிட்டுள்ளது.இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டி அடித்தனர்.

இருப்பினும் சிறிது நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய யானை அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள தென்னை,வாழை, மா, பலா மரங்களை துவம்சம் செய்தது. நெல்லியாம்பதி மலை சாலையில் வாகனங்களை வழிமறித்து வாகனங்களில் வருபவர்களை அச்சுறுத்தியது. இதனால் நெல்லியாம்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சில்லிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் அல்லது வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement