தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் மீது லாரி மோதி மகள் கண் முன்னே தாய் தலை நசுங்கி பரிதாப பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: வண்டலூர், மண்ணிவாக்கம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் ராணி (55). இவரது மகள் சினேகா (22). இருவரும், நேற்று முன்தினம் காலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காந்தூர் பகுதியில் நடைபெற இருந்த உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பைக்கில் சுங்குவார்சத்திரம் - மதுரமங்கலம் சாலை வழியாக காந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மகள் சினேகா பைக் ஓட்டுச்செல்ல, ராணி பின்னால் அமர்ந்துக்கொண்டு சோகண்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த ராணி மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை கண்ட டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News