தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் மரத்தில் ஓய்வெடுத்த கரடி: பொதுமக்கள் அச்சம்

Advertisement

ஊட்டி: குன்னூர் அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் கரடி ஓய்வெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அதே சமயம் பெரும்பாலான கிராமப்புறங்கள் வனத்தை ஒட்டியே அமைந்துள்ளன. தற்போதைய கால கட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப வனங்கள் இல்லாததால் இவை கிராமப்புறங்களில் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருவதை காண முடியும்.

மேலும் பல்வேறு தேயிலை தோட்டங்களையும் வாங்கியுள்ள பெரும் செல்வந்தர்கள் அவற்றை சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். இதனால் அவை உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகை புரிகின்றன. இந்நிலையில் பழங்களின் சீசன் உள்ளதால் இந்த பழங்களை உண்ண வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதியில் கரடிகள் வருவது அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குன்னூர் சப்ளை டிப்போ குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மரத்தில் கரடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Advertisement