தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு

*கலெக்டர் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்
Advertisement

பெரம்பலூர் : பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்திய எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் நேற்று (11ம்தேதி) தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து, எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ஜியமாகக் கொண்டு வருவதும், புதிய தொற்று இல்லாமை, எச்.ஐ.வி / எய்ட்ஸால் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரங்களிலும் உள்ள முக்கிய கிராமங்களில் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், பறை இசை மற்றும் ஒயிலாட்டம் போன்ற 10 கிராமிய நிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் மற்றும் பால் வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று நடைபெற்ற நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண் ராஜ் தொடங்கிவைத்து, பொது மக்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், மாவட்ட சுகாதார அலுவலருமான டாக்டர் கீதா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) சுமதி, காசநோய் துணை இயக்குநர் டாக்டர் நெடுஞ் செழியன், தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் டாக்டர் விவேகானந்தன், ஆற்றுப் படுத்துநர் பழநிவேல் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவைப் பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement