தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து 2 கார்கள் ேமாதல் : தந்தை, மகள் பலி: தாய், மகன் படுகாயம்

Advertisement

விராலிமலை: மதுரை வரதராஜூ சாலையை சேர்ந்த முத்துவேல் மகன் முருகன்(40). இவர் தனது காரில் மனைவி சவுமி(34), மகன் வருண் கார்த்திக்(11), மகள் தியா(6) ஆகியோருடன் திருச்சிக்கு வந்து விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு விராலிமலை வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். காரை முருகன் ஓட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அடுத்த இடையபட்டி அருகே சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு கட்டையை தாண்டி மறுபுறம் சாலைக்கு சென்றது.

அப்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு நாகராஜன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு கார் மீது முருகனின் கார் பயங்கரமாக மோதியது.இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் முருகன்(40), அவரது மனைவி, மகள், மகன் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தியா வழியிலேயே உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த முருகன் சிறிது நேரத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த சவுமி, வருண் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Related News