தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி மோசடி

Advertisement

*அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர் கைது

கோபி : ஏலச்சீட்டு நடத்தி 1.60 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி நாகர்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா (60). இவர் சிறுவலூர் அருகே உள்ள வண்ணாந்துறை புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரும் காளிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற ஆசிரியை குளோரி, அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் குடியரசி (55) ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடம் கோபி அருகே உள்ள கரட்டூர் கே.டி.எஸ் நகரை சேர்ந்த பழனிச்சாமி (57) உள்ளிட்ட பலரும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். ஏலச்சீட்டு தொகை மட்டுமின்றி பலரிடமும் கடனாகவும் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏலச்சீட்டு தொகை மற்றும் கடனாக பெற்ற 1.60 கோடி ரூபாயை பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த கோபி போலீசார் பிரபாவையும், குடியரசியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை குளோரியை தேடி வருகின்றனர்.

Advertisement