தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிதி நிறுவனம் மோசடி வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!!

சென்னை : நியோமெக்ஸ் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக வாக்குறுதி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைச் சேர்த்தது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை தகுந்த நேரத்தில் அமல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார். 14 மாவட்டங்களில் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை முடிவுற்றதாக குறிப்பிட்ட அவர், மேலும் 2 மாவட்டங்களில் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, குறுகிய காலத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை துரித நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related News